1/22/2010

பிரபாகரன் உயிருடன் இருப்பதற்க்கான சாத்தியங்கள்

இந்த வாரம் வெளியான விகடனில் தலைவன் இருக்கின்றான் என்ற தலைப்பில் வந்த கட்டுரையில் சில பகுதிகள்;

பிரபாகரனை அழித்துவிட்டேன் என்பதுதான் மகிந்தாவின் செல்வாக்கை சிங்களவர் மத்தியில் உயர்த்தியது.தொண்ணுறு சதவித மக்களுக்கு சந்தோசத்தை தரகூடிய அந்த செய்தியை சொல்லி வாக்குகள் தேட ஏன் மகிந்தா முயற்சிக்க வில்லை?
புலிகளின் அச்சுறுத்தல் இன்னும் ஓயவில்லை 'என்று மகிந்தா சொன்னதாக சிங்கள பத்திரிக்கை திவயின சொல்கிறது ..


பிரபாகரனின் அம்மா பார்வதியை, திருமா சந்தித்த போது ,தம்பி நலமாக இருக்கிறார், என்னை கனடாவில் சந்திப்பதாக சொல்லியிருக்கிறார் என கூறியுள்ளார். இது ஈழ தமிழர்கள் மத்தியில் ஆர்வத்தை உண்டு பண்ணியிருப்பதை மறுக்க முடியாது

ராஜீவ் கொலை வழக்கு தொடர்பான விசாரணைக்கு பிராபகரன் பொட்டு அம்மான் ஆகியோரின் மரண சான்றிதழ்களை ஒப்படைப்பதாக பல்நோக்கு கண்காணிப்பு குழு சொன்னது ஆனால் இன்னும் தரவில்லை எதுவும் முற்றாக முடிந்துவிடவில்லை என்பதையே இந்த செய்திகள் காட்டுகின்றன.

பிரபாகரன் குறித்து கொழும்பு பத்திரிக்கை யாளர்கள் புது தகவல் ஒன்றை சொல்கிறார்கள் ..மே பதினேழாம் தேதி ,இன்னும் சில மணி நேரத்தில் அனைவரையும் முற்றாக அழித்து விடுவார்கள் என சேட்டிலைட் தொலைபெச்யில் அறிவித்த் கடற்படை தளபதி சூசை யிடம் ,தலைவர் என்ன ஆனார் என எதிர்தரப்பில் இருந்து பேசியவர் கேட்டபோது ,தலைவர் பத்திரமாக இருக்கிறார் ’’என்று சொல்லி இருக்கிறார்..’’தலைவரை பாதுகாப்பான இடத்திற்க்கு கொண்டு போக நாங்கள் அனைவரும் சொன்னபோது அவர் மறுது விட்டார் .அவர் சம்மதிக்க வில்லையானால் மயக்க மருந்து கொடுத்தாவது கடத்தி சென்று விடுவோம் ‘என்று பொட்டு அப்போது சொன்னார் .என்று அங்கிருந்து தப்பி வந்த போராளி ஒருவர் இணையதளம் ஒன்றில் எழுதி இருக்கிறார் ..

’நாங்கள் கடைசியாக பார்த்த அன்று ,தலைவர் ஹெல்மட் அணிந்து இருந்தார் தலைவரும்,பொட்டுவும் ஜீப்பில் வந்தார்கள்.என்று சொல்கிறார் அவர்.ஜீப்பில் வந்தார் என்றால் இரண்டு ,மூன்று கிலோமீட்டராக குறுக்க பட்ட காலமாக இருக்க வாய்ப்பில்லை..சில பல மாதங்களுக்கு முன்பாகவே இருக்க முடியும்

அப்படியானால் சிஙகள ரானுவம் காட்டும் உடல் யாருடையது..?போராளி விமலன் உடல்தான் அது.பிரபாகரன் போலவே உருவ ஒற்றுமை கொண்ட வர் விமலன் என்பது போராளிகள் அனைவருக்கும் தெரியும்.
பொட்டு அம்மானே இது போன்ற திசை திருப்பும் காரியங்களை அழகாக செய்ய கூடியவர் என்பதால் இது அவர் வேலையாகவும் இருக்கலாம்

வீட்டுக்கு ஒருவரை போராட்டத்திற்க்கு தர வேண்டும் என முடிவான போது ,பிரபகரன் தன்னை பலியிடவே விரும்பினார் ஆனால் சூல்னிலை மாறி,’’போரை துவங்க நீங்கள் இருந்தாகவேண்டும் என வற்புறுத்தப் பட்டது எனவே அதுவரை கிழக்கு மகாண காடுகளில் இருந்த சார்லச் ஆண்டனி முல்லை தீவுக்கு வரவ்ழைக்க பட்டார்

0 வாழ்த்துகளும், திட்டுகளும்:

Wowzio Panoramic Slideshow

லேபிள்கள்

About This Blog

  © Blogger template 'Greenery' by Ourblogtemplates.com 2008

Back to TOP